கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது

லண்டன் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இதனால் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வீடுகளில் உள்ளனர். அவர்களில் சிறு பகுதியினர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை பார்க்கின்றனர். பலர் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

தொலைக்காட்சியிலும், நெட்பிளிக்ஸ், பிரைமிலும் மட்டுமே எவ்வாறு சலிக்காமல் நேரம் செலவிட முடியும்? புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வது தான் சலிப்பை போக்கும் என உணர்ந்துள்ளனர். இந்த கடினமான காலங்களில், எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதனை தெரிந்துள்ள பலரும் யேல் பல்கலைக்கழகத்தின், 'நலவாழ்வுக்கான அறிவியல்' என்ற ஆன்லைன் பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

மார்ச் 26-ம் தேதி வரை இப்பாடத்தில் 13 லட்சம் பேர் இணைந்துள்ளனர். 2018-ல் இக்கல்வி தொடங்கியதிலிருந்து 2020 பிப்., வரை 5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் கிடு கிடுவென உயர்ந்துவிட்டது. இதில் அதிகமானவர்கள் இணைந்த முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.